Tuesday 30th of April 2024 05:48:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
பரசிட்டமோல் அதிகபட்ட சில்லறை விலை ரூ.2.30; வர்த்தமானி வெளியானது!

பரசிட்டமோல் அதிகபட்ட சில்லறை விலை ரூ.2.30; வர்த்தமானி வெளியானது!


வலி நிவாரணி மற்றும் காய்ச்சலுக்காக பொதுவாகப் பாவிக்கப்படும் 500 மி.கி. அளவு கொண்ட் பரசிட்டமோல் (Paracetamol) மருந்துக்கான அதிகபட்ச சில்லறை விலை 2 ரூபா 30 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 28-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

உலக சந்தையில் பரசிட்டமோல் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றை இறக்குமதி செய்வதை தவிர்த்து வருகின்றன. இதனால் உள்ளூர் சந்தையில் பரசிட்டமோல் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பரசிட்டமோல் வில்லைகளை அவற்றின் அதிகபட்ச கொள்ளளவில் தயாரிப்பதற்கு மருந்து உற்பத்தி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளன. தினமும் மூன்று மில்லியன் பாரசிட்டமோல் வில்லைகளை தயாரித்து வருகின்றது என அமைச்சர் சன்ன ஜெயசுமன கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE